விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வரவுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. பலரும் அதை வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை மற்றும் கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷம் துக்கங்களை பற்றி விவரித்து கதைக் களம் நகர்வதால் இதற்கென ஏராளமான ரசிகர் கூட்டமே காணப்பட்டது.
எனினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனையடுத்து சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கடைசி எபிசோட் இன்று 28ம் திகதி ஒளிபரப்பாகும்.
இதன் பொருட்டு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு சென்று இத் தொடரை சுபம் எனக் கூறி முடித்துவிட்டனர்.
Listen News!