• Sep 20 2024

வாரிசா? துணிவா? எந்தத் திரைப்படம் அதிக திரையரங்குகளைப் பெற்றுள்ளது தெரியுமா?- உதயநிதி கொடுத் புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் தமக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளனர். மேலும் விஜய் நடிப்பில் வாரிசு என்னும் திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு என்னும் திரைப்படமும் உருவாகி வருகின்றது.

எனவே இந்த இரண்டு படங்களும் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளன. 8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகுவதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான வம்சி  இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் 3 ஆவது படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துணிவு படத்திலிருந்து 2 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில் எந்த படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-

சில முறை அஜித் சார், விஜய் சார் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளன. துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள், ஸ்க்ரீன்கள் தான் ஒதுக்கப்படும். துணிவு படத்தின் தியேட்டர் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான வர்த்தகம் 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது என அவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement