தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தான் துணிவு மற்றும் வாரிசு. அஜித் மற்றும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.
மேலும் இத்திரைப்படங்கள் இரண்டும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இப்படங்கள் குறித்து பிரபலங்கள் பலரும் கூறி வரும் நிலையில் வடிவேலு கூறிய விடயமும் வைரலாகி வருகின்றது.
அதாவது வடிவேலு சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.அப்போது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டிருந்தனர். அந்த சமயத்தில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது பற்றியும், எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வடிவேலு, "எனக்கு அத பத்தி தெரியலையே. எல்லா படமும் நல்லா ஓடணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும். சினிமா நல்லா இருந்தாதான் எல்லாரும் நல்லா இருக்க முடியும். அதுனால எல்லா படமும் ஓடணும்" என கூறினார். அதே போல, தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும் வடிவேலு பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!