விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஹேமாவுக்குகு தன்னுடைய அம்மா கண்ணம்மா தான் என்று தெரிந்து விட்டது.
ஆனால் அப்பாவைத் தெரியாமல் இருக்கும் ஹேமா அப்பா யார் என்ற உண்மையை அறிய முயற்சி செய்து வருகின்றார். இதனால் ஹேமாவை வெண்பா கடத்தினார். ஒரு வழியாக ஹேமா கடத்தப்பட்டதை அறிந்த கண்ணம்மா காப்பாற்றி விட்டார்.
இது ஒருபுறம் இருக்க பாரதிக்கு ஹேமாவும் லக்ஷ்மியும் தன்னுடைய பிள்ளைகள் தான் என்ற உண்மை தெரிந்ததால் ஹாஷ்பிட்டலில் கதறி கதறி அழுகின்றார். எப்போது குடும்பத்துடன் வந்து இணைவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஹேமா தனது அப்பா யார் என்று கண்டு பிடிப்பதற்காக ஹாஸ்பிட்டல் மாடியிலிருந்து குதிப்பதற்காக ஏறியுள்ளார். அப்பா யார் என்று சொன்னால் தான் இறங்குவேன் என்று அடம் பிடிப்பதையும் இதில் காணலாம்.
Listen News!