• Sep 20 2024

வெண்பாவைப் பற்றிய உண்மைகளை சொன்ன ஹேமா- கண்ணம்மா தான் மனைவி என்று எல்லோர் முன்னாடியும் சொன்ன பாரதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாரதி தான் கண்ணம்மாவிடமும் ஹேமா லக்ஷ்மியிடமும் நடந்த கொண்டதை நினைத்து மனம் வருந்திக் கொண்டே காரில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்.ஹேமாவுக்கு மருந்து வாங்குவதற்காக  கண்ணம்மாவும் லக்ஷ்மியும் வெளியில் சென்று விடுகின்றனர்.அதே போல அகிலனும் அஞ்சலியும் வெளியில் கடைக்கு சென்றவுடன் வேணுவும் செந்தர்யாவும் நித்திரையில் ஆழ்ந்து விடுகின்றனர். இந்த நேரம் பார்த்து ஹேமா ரெஸ் ரூம் போக வேண்டும் எனக் கூறி வெளியில் வந்து லிப்ட்டில் ஏறி மொட்டை மாடியில் ஏறி குதிக்கிறதுக்காக நிற்கிறார்.


இதனைப் பார்த்தவர்கள் கீழ இறங்கி வாங்க என்று கத்துகின்றார்கள். பின் இதை அறிந்த கண்ணம்மாவும் அங்கு ஓடி வந்து ஹேமாவை இறங்கி வரசொல்கின்றனர். ஆனால் ஹேமா முடியாது உண்மையை சொன்னால் தான் இறங்குவேன் என சொல்லுகிறார்.பின்னர் கண்ணம்மாவுடன் அஞ்சலி அகிலன் வேணு சௌந்தர்யா ஆகியோரும் சேர்ந்து கத்துகின்றனர் ஆனால் ஹேமா கேட்பதாக இல்லை.

இதனைத் தொடர்ந்து வெண்பாவை பார்க்க வந்திருக்கும் ரோஹித் மற்றும் சர்மிளாவும் விஷயம் அறிந்து அங்கே சென்று ஹேமாவை இறங்கி வர கூற அப்போ ஹேமா வெண்பாக்கு தலைல எப்படி அடிபட்டது தெரியுமா என்று கூறுகின்றார். அதாவது நான் அப்பாவை தேடி போயிட்டு இருக்கும் போது எங்க அம்மா தப்பானவங்க எனக்கு அப்பா ஒருத்தர் மட்டும் இல்லை என்று சொன்னாங்க அதனால தான் கல்லெடுத்து மண்டைய உடைச்சேன் என்று கூறுகின்றார்.


இதை எல்லாம் கேட்ட சர்மிளாவும் ரோஹித்தும் வெண்பாவைத் திட்டுகின்றனர்.இருந்தாலும் கண்ணம்மா யாரும் என்னை என்ன சொன்னாலும் கவலை இல்லை நீ கிழ இறங்கி வா என்று கத்த அந்த நேரத்தில் அங்க வரும் பாரதி ஹேமா நான் தான் உன்னோட அப்பா கண்ணம்மா தான் என்னோட மனைவி லக்ஷ்மியும் நீயும் நான் பெத்த பொண்ணுங்க என்று கூறுகின்றார்.

இதனைக் கேட்டு எல்லொரும் சந்தோஷம் அடைந்தாலும் ஹேமா நான் இதை நம்பமாட்டேன். அவர் பொய் சொல்லுறாரு என சொல்ல சௌந்தர்யா உண்மையைக் கூறுகின்றார். அதே போல லக்ஷ்மியும் கூற ஹேமா நம்புகின்றார். இருந்தாலும் ஏறும்போது தைரியமா ஏறிட்டேன். ஆனால் பயமாக இருக்கு என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர் அத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement