விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. இந்த சீரியலில் இன்றைய வெற்றிக்கு சுடர் ஆக்சிடென்ட் ஆன விஷயம் தெரிந்து விட்டது.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சுடரைத் தேடி வெற்றி ஹாஸ்பிட்டலுக்கு விரைகின்றார். ஆனால் அங்கு போலீசார் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். அதற்கு வெற்றி "எனக்குத் தெரிஞ்சவங்களோட பாப்பா அடிபட்டு ICUவில் இருக்கு சார்" எனக்கு கூறுகின்றார்.
அதற்கு போலீஸ் "ஏய் முட்டாள், சுடர் யார் தெரியுமா, அது கலெக்டர் ஓட பொண்ணுடா" எனக் கூறுகின்றார். அதைக் கேட்டதும் வெற்றி ஆச்சரியத்தோடு மூழ்கியது மட்டுமல்லாமல் கை எடுத்துக் கும்பிட்டு "என் பிள்ளை சாகலையா.. என் பிள்ளை சாகலயா, என் பிள்ளை சாகலயா " எனக் கேட்டு கதறி அழுகின்றார்.
இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!