தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்த நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது.
அந்தவகையில் 21 பேருடன் ஆரம்பமாகி 50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 8பேர் வெளியேறி தற்போது 13பேர் மட்டுமே உள்ளார்கள். அதிலும் குறிப்பாக இந்த வாறன் டபுள் எவிக்ஷன் என கமலினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பலரின் கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "இவங்க எத்தனை வேஷம் போட்டாலும் நல்ல மழை பொழியும் போது உண்மை முகம் தெரிய ஆரம்பிச்சிடும், இருந்தாலும் அதற்கும் இன்னொரு வேஷம் போட்டிருக்காங்க, இப்படி எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை பிதுக்கிக்கிட்டு வெளியே வரத்தான் செய்யும்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "இவங்களுக்கு இவங்களைத்தான் பிடிக்கும், இவர்களுக்காக தான் சப்போர்ட் பண்ணுவாங்க என்ற அந்த சார்பு வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது. இம்முறை நடக்கப் போகின்ற இரண்டு எவிக்சனில் இந்த டயனமிக்ஸ் எப்படி மாறுகின்றது பார்ப்போம்" எனக் கூறி இருக்கின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!