அங்காடித் தெரு சிந்துவை சமீபத்தில் பேட்டி எடுக்க சென்றவர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். சிந்து உடல்நிலை குறைந்து கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், இது நான் செய்த கர்மாவா? இல்லையென்றால் என் முன்னோர்கள் செய்த பாவமா? தெரியவில்லை.
நான் எனக்கு தெரிஞ்சு எந்த தப்பும் பண்ணல. நான் உழைச்சு மற்றவங்களுக்கு உதவி தான் செய்துட்டு இருக்கேன். என்னை தான் எல்லோரும் ஏமாத்தி இருக்காங்க ஆனால் நான் யாரையும் ஏமாத்தவில்லை. நான் மனசு ரீதியாவும், உடல் ரீதியாவும் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
2020ல் எனக்கு ஆபரேஷன் ஆச்சு அதிலிருந்து நான் இப்பவரை கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். 2 1/2 வருடமாக ஆங்கில வைத்தியம் செய்தேன் ஆனால் குணமாகவில்லை. அதன்பின்னர் 35 நாட்கள் தமிழ் வைத்தியம் செய்தேன்.
என் உடல் முழுதும் புண்ணாகி விட்டது. அந்த புண்ணிலிருந்து புழு எல்லாம் எடுத்தார்கள். உணவு தான் மருந்து, நல்லா ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். ஆனால் என்னை பார்த்துக்கொள்ளவோ, உழைச்சு தரவோ யாரவது இருந்தால் நான் ரெஸ்ட் எடுக்க முடியும்.
நானே தான் என்னை பாத்துக்கிறேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கு அவளும் கல்யாணம் பண்ணி கணவரை இழந்துவிட்டால். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு. சகிலா அக்கா எனக்கு ஒரு 10000 ரூபா கொடுத்தார். என்னுடைய பயண செலவிற்கு அதை பயன்படுத்துவேன். பணத்திற்கு நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன்.
சொந்தக்காரர்களிடம் பணம் கேட்பது யாருக்குமே பிடிக்காத ஒரு விஷயம், அதைவிட தெரிந்தவர்களிடம் கேட்கலாம். இந்த வீடியோவை பார்த்து விட்டு எனக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். என்று கூறி தனது மனக்கவலையை கொட்டி தீர்த்தார்.
Listen News!