பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ஆனது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற அதே நிலையில் அங்கு காதல், சண்டை, சச்சரவு, புரளி, பொய் என அனைத்து விதமான நாடகங்களும் அரங்கேறிய வண்ணம் தான் இருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை சக போட்டியாளர்கள் மட்டுமன்றி உலகம் பூராகவும் உள்ள கோடிக்கணக்கான மக்களும் அவதானித்து வருகின்றனர்.
அந்தவகையில் அங்கு அசல் மற்றும் நிவாஷினிக்கு அடுத்தபடியாக தற்போது அமுதவாணன், ஜனனி ஆகியோரின் செயற்பாடுகளும் பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது.
அதாவது ஜனனி அமுதவாணனின் பகடைக்காயாக இருக்கிறார், அமுதவாணனும் டாமினேட் செய்கிறார் என்ற வாதத்தை பற்றி கமல் வார இறுதி எபிசோட்டில் கேட்டிருந்தார். அதுமட்டுமல்லாது ஹவுஸ்மேட்ஸ் பலரும் இது குறித்துப் பேசி இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கமல் தனலட்சுமியின் மோசடித்தனத்தை குறிப்பிட்டு சுட்டிகாட்டியபோது அமுதவாணன் உள்ளிட்ட மற்றவர்களையும் வன்மையாகக் கண்டித்தார். அதாவது மோசடிக்கு துணையாக இருப்பதும் குற்றமே என்று தெரிவித்தார். கமல் இவ்வாறு கூறியதும் அமுதவாணன் சிறிது நேரம்கடும் அப்செட்டானார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் அமுதவாணன் ஜனனியை தான் பகடைக்காயாக பயன்படுத்துவதாக பலரும் கூறியமையை நினைத்து ரொம்பவே பீல் பண்ணிக் கொண்டு இருக்கின்றார்.
இதனைப் பார்த்த ஜனனி உடனே "நீ என்னைப் பகடைக்காயாய் use பண்ண நான் என்ன பக்கோடாவா" என்று கேட்கின்றார். இதனைப் பார்த்த பலரும் என்ன ஒரு அறிவாளி எனக் கூறி ஜனனியை கிண்டலடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..!
Janani to Amuda
Pakkada Kaaya Use panna Naa Enna Pakodava🤣🤣🤣#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil pic.twitter.com/yKwcqIfpEF
Listen News!