• Sep 19 2024

மாவீரனாகத் தெறிக்க விட்டாரா சிவகார்த்திகேயன்... திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் இன்றைய தினம் 'மாவீரன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் பிரச்சினையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படத்தினுடைய கதைக்களம் அமைந்துள்ளது. அதாவது சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்களின் உடைய வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் மாற்றப்படுகிறார்கள். 

ஆனாலும் ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்த குடியிருப்பில் தினம் தினம் பிரச்சினைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் மூக்கை நிலைக்காது எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்தில் அந்த துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.

இதனால் அங்குள்ள மக்கள் சிவகார்த்திகேயனை மாவீரனாக பார்க்கிறார்கள். இவ்வாறாக சிவகார்த்திகேயனிற்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது..? மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

எப்போதுமே நம்ம வீட்டு பிள்ளையாக நம்மை சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் ஆக்ஷன் ஹீரோவாகவும் அசத்தி இருக்கின்றார். 

அதேபோன்று அவருக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அமைச்சர் மிஷ்கினின் கேரக்டர், மற்றும் நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. 

அதுமட்டுமல்லாது யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நன்றாகவே மக்களை கவர்ந்துள்ளது.

மேலும் சரிதா, அதிதி ஷங்கர் கேரக்டர்கள் கதைக்காக பயன்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் அவர்களுக்கு காட்சிகள் இல்லை.


படம் எப்படி?

மடோன் அஸ்வின் இப்படத்தில் பூர்வக்குடி மக்களின் பிரச்சினையை பற்றி பேசியுள்ளார். இருப்பினும் அதனை அழுத்தமாக பேசாமல் முதல் பாதியில் காமெடியான திரைக்கதை  அமைக்கப்படிருப்பதால் படம் பார்ப்பவர்களும் ஜாலி  மோடில் குறித்த பிரச்சினையை பார்க்கிறார்கள். 

இவ்வாறாக முதல் பாதி முழுக்க கலகலப்பான காட்சிகளுடன் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் சீரியஸாக மாறினாலும் கதையில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் படத்தில் அசசரீயாக ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் படத்தை இன்னும் இன்னும் சுவாரசியம் ஆக்குகிறது. 

அதுமட்டுமல்லாது பரத் சங்கரின் பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. 

தொகுப்பு 

மொத்தத்தில் மாவீரன் பெயரில் மட்டும் தான்.. கதையில் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement