தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாகிய நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23-ஆவது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த கியூட் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் 23வருட காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அந்தவகையில் இவர்கள் இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அதற்கு முன்பே அஜித்-ஷாலினி இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் எப்படி காதல் உருவானது என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது 'காதலுக்கு மரியாதை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சரண், அஜித் நடிப்பில் உருவாகிய 'அமர்க்களம்' படத்திற்கு கதாநாயகியாக ஷாலினியை அணுகினர். ஷாலினி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால் அந்த வாய்ப்பை உடனடியாக நிராகரித்தார். ஆனால் அஜித் தலையிட்டு படப்பிடிப்பால் அவரது படிப்புக்கு இடையூறு ஏற்படாது என உறுதியளித்தார்.
இது தான் இவர்களின் அழகான காதல் கதையின் இனிய ஆரம்பம். இந்நிலையில் இப்படத்தில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஷாலினியின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. தவறுதலாக ஷாலினியின் கை கத்தியால் வெட்டுப்பட்டது. அது ஒரு விபத்து. அந்தக் காயத்தினால் ஷாலினி வலியில் கதறி அழுததை பார்த்த அஜித்துக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. அதுவே பின்னர் அவர்களின் காதலுக்கும் வழிவகுத்தது.
இதனையடுத்து ஷாலினியின் உடல்நிலை குறித்து அஜித் மிகவும் கவலைப்பட்டார். இந்த விஷயம் ஷாலினியை மிகவும் மனதளவில் தொட்டது. பின்னர் அமர்க்களம் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் அஜித். அந்தக் காதலை பயத்துடன் சொன்னார். அப்போதும் ஷாலினியின் மனதில் அஜித் இடம் பிடித்துத்தான் இருந்தார்.
இதன் பின்னர் ஷாலினி தான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்த பிறகு திருமண வாழ்க்கையில் நுழைந்தார். இவ்வாறாக திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆனாலும் அஜித் - ஷாலினிக்குள் காதல் என்பது. இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
Listen News!