• Sep 20 2024

கண் கலங்கியவாறு வெளியேறிய ஆண்ட்ரியன்... கண்ணீர் சிந்திய ரசிகர்கள்... எலிமினேஷன் குறித்து வெளியிட்ட முதல் பதிவு இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக்வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இது ஒரு சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு என்றுமே பஞ்சம் இருப்பதில்லை. இந்நிலையில் இதன் 4-ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.


அந்தவகையில் கடந்த வாரம் எலிமினேஷன் போட்டி நடைபெற்றது. அதில் இறுதியில் பேஸ் ஆப் குக்கிங்கில் கிரண் மற்றும் ஆண்ட்ரியன் வந்தனர். இந்த இருவரில் சற்றும் எதிர்பார்க்காத விதமாக ஆண்ட்ரியன் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஆண்ட்ரியன் எலிமினேஷன் என தெரிந்ததும் அங்கிருந்த அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர். ஆண்ட்ரியனும் சற்று கண்கலங்கினார். இந்நிலையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் தன்னுடைய முதல் பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.


இப்பதிவில் அவர் "என்னுடைய இந்த எலிமினேஷனுக்கு வேறு யாரும் காரணமில்லை. இது எனக்குரிய நாள் கிடையாது. அதனால் தான் நான் இதிலிருந்து எலிமினேஷன் ஆகிவிட்டேன். எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன், கண்டிப்பாக வைல்டு கார்டு சுற்றில் கம் பேக் கொடுப்பேன் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement