விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாரதி கண்ணம்மா' சீரியலினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீரியலினுடைய இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கண்ணம்மா பாரதிக்கு போன் செய்து நான் தடுமாறினதைப் பார்த்ததும் அம்மா பதற்றத்தில் எழுந்து உட்கார்ந்திட்டாங்க" எனக் கூறுகின்றார்.
அதற்கு பாரதி நான் உனக்கொரு ஐடியா சொல்லுறேன் எனக் கூறி ஒரு சில விடயங்களை கூறுகின்றார். அதனையடுத்து கண்ணம்மா ஏணியை வைத்து மேலே ஏறி கரண்ட் அடித்து கீழே விழுந்து அம்மா எனக் கத்துகின்றார். அதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அம்மா, கண்ணம்மா எனக் கத்திக் கொண்டு கீழே கால் வைத்து எழும்புகின்றார்.
இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.
Listen News!