• Sep 20 2024

ஒன்றாகக் கூடி இருந்து.. கண்ணீர் விட்டுக் கதறி அழும் போட்டியாளர்கள்... கவலையுடன் வெளிவந்த ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி என்றால் அது 'பிக்பாஸ்' தான். இது 5சீசன்களை வெற்றிகரகரமாக கடந்திருக்கின்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 6 தற்போது பத்து போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகின்றது. அதாவது இதுவரை மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

அந்தவகையில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி என மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் தங்களுடைய அம்மா, அப்பா பற்றி ஒவ்வொரு போட்டியாளர்களும் கண் கலங்கிப் பேசுகின்றனர். அதாவது ஏடிகே கூறுகையில் "என் அம்மா அப்பா நீ என்ன பண்ணுறாய், எதுவுமே கொடுக்க மாட்டேங்குறாய் என என் அம்மா அப்பா இதுவரை கேட்டதில்லை" எனக் கூறுகின்றார்.

அத்தோடு விக்ரமன் "கஷ்டப்படாத ஒரு நிலைமை எனக்கு வந்திருக்கு என்றால் அதற்கு காரணம் என் அம்மா அப்பா தான், அவர் இல்லாட்டில் நான் இல்லை" எனக் கூறுகின்றார். அதேபோல் மைனாவும் அம்மா, அப்பாவை சேர்ந்து ஒரு நாளுமே பார்த்தது இல்லை எனக் கூறி அழுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement