• Sep 20 2024

மாஸாக வந்திறங்கிய ஆதி குணசேகரன்... யார் தெரியுமா..? ரசிகர்களுக்கு காத்திருந்த டுவிஸ்ட்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


நடிகர் மாரிமுத்து இறந்த நாளிலிருந்து இந்த சீரியலினுடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் காலியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் புது ஆதி குணசேகரன் யாராக இருக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


அதில் ஞானம் மற்றும் கதிரிடம் விசாலாட்சி "நீங்க இரண்டு பேரும் மட்டும் வந்திருக்கீங்க பெரியவன் எங்க" எனக் கேட்கின்றார். மேலும் ரேணுகாவும் இந்த தடவையும் சாப்பாடு உருட்டிக் கொடுத்ததும் சாப்பிட்டு மயக்கத்தில் வந்திட்டிடீங்களா" எனக் கேட்கின்றார்.


அதற்கு நந்தினியும் செருப்புப் பார்த்தேன், குரலைக் கேட்டேன் என்றுதான் சொல்லிட்டு இருக்கீங்களே ஆக்ஷனைக் காணோம் என்கிறார். 


பதிலுக்கு குணசேகரனுக்கு போன் பண்ணிய கதிர் "அண்ணை இவங்களுக்கு ஆக்ஷனை பாக்கணுமாம் காட்டிடுவோமா" என்கிறார். அந்த சமயத்தில் ஆதி குணசேகரனும் வண்டியில் இருந்து கீழே இறங்குகின்றார். அதனைப் பார்த்ததும் கரிகாலன் "உங்க ஆட்டத்தை எல்லாம் அடக்க மாமா வந்திட்டார்" என்கிறார். 


அந்தவகையில் ஆதி குணசேகரனாக நடிகர் வேல ராம மூர்த்தி வந்து இறங்குகின்றார். நடிகர் பசுபதி தான் ஆதி குணசேகரனாக வருவார் என அதிகம் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக வந்திறங்கியது சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. எது எவ்வாறாயினும் மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் சூடுபிடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Advertisement