தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் 'வாரிசு' படமும் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வெளியாகி இருந்தது.
இவ்விரண்டு படங்களும் வெளியாகிய நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்து தற்போது 10 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அதன் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் துணிவு படம் ரூ. 100 கோடி வசூலை தமிழகத்தில் செய்துள்ளது. அதேபோன்று கடந்த சில நாட்களாக துணிவு படத்தை விட ஓரிரு கோடிகளில் பின்தங்கி இருந்த வாரிசு தற்போது துணிவுக்கு நிகரான ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!