விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கடந்த வாரம் வங்கி ஊழியர்கள் கண்ணனை அடித்ததால், கதிர் அந்த வங்கி ஊழியர்களை தாறுமாறாக நடித்திருந்தார். இதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார் கதிர்.
இந்நிலையில் இந்த சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் ரூ. 5 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தினால் கொடுத்த கேஸை வாப்பஸ் வாங்கி விடுகிறோம் என வங்கி நிருவாகம் அவர்களிடம் கூறுகின்றது. இதனையடுத்து பணத்தை ஏற்பாடு செய்து வங்கியில் கட்டி தனது தம்பி கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே கூட்டி வருகிறார் மூர்த்தி. இவ்வாறாக இந்த வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!