விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாடல் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இதற்கு இணையாக ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பலரும் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஸாவும் தனது குரல்வளத்தை சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இவர் ''குறுக்கு சிறுத்தவளே..என்னக் குங்குமத்தில் கரைச்சவளே" பாடலை பாடி அங்கிருந்த நடுவர்கள் உட்பட அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தார்.
கில்மிஷாவின் திறமையைப் பார்த்து வியந்த நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீனிவாசன் "என்னை பொறுத்தவரை கில்மிஷா ஒரு ஸ்டார். குயில் பாட்டு பாடியதில் இருந்து அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்" என வெகுவாகப் பாராட்டி இருக்கின்றார்.
இவ்வாறாக 'சரிகமப' நிகழ்ச்சியில் கில்மிஷாவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதோ கில்மிஷா பாடிய அந்தப் பாடல்..!
Listen News!