திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் அமலா பால், தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான பகீர் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் அமலாபால். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான மைனா படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார். அவர் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த படமும் இதுதான். இப்படத்தின் வெற்றிக்கு பின் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்தன. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு நாக சைதன்யா நடிப்பில் வெளியான் பெஜவாடா என்கிற படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அமலா பால், இதையடுத்து அவருக்கு அங்குள்ள முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து குவிய ஆரம்பித்தது.
தெலுங்கில் நான்கு படங்களில் மட்டுமே நடித்த அமலா பால், அதன்பின் அந்த மொழி படங்களில் நடிப்பதை திடீரென நிறுத்திவிட்டார். இதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்து வந்த அவர், தற்போது தான் தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான பகீர் காரணம் ஒன்றை கூறி ரசிகர்களிடத்தே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதன்படி அவர் தெரிவித்ததாவது : “நான் தெலுங்கு படங்களில் நடித்தபோது, அந்த திரையுலகம் குறிப்பிட்ட குடும்பத்தினர் பிடியில் இருப்பதை உணர்ந்தேன். நான் நடித்த சமயத்தில் தெலுங்கு படங்களே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்தில் குறைந்தது 2 ஹீரோயின்களாவது இருப்பார்கள். அவர்களை பாடல்களுக்கும், காதல் காட்சியில் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினர்.
ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் பெண்களை அவர்கள் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுப்பார்கள், அதில் ஹீரோக்கள் தான் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்து விடுவார்கள். அத்தோடு என்னால் அங்கு நீடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் அப்படி இல்லை. இங்கு என வித்தியாசமான ரோல்கள் நிறைய கிடைத்தன” என அமலாபால் தெரிவித்துள்ளார்.
Listen News!