பலரும் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா, பிரதீப், நிவிஷா, நிக்சன், மணி சந்திரா, அக்ஷ்யா, ஜோவிகா விஜயகுமார், ஆக்ஷயா, விஷ்ணு, விசித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன், அனன்யா ராவ், விஜய் வர்மா, பாவா செல்லத்துரை, யுகேந்திரன் என 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் காதல், கலாட்டா, சண்டை, சச்சரவு என்பன இருக்கும் என ரசிகர்கள் முதல் நாளை வைத்தே நோட்டமிட்டுக் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாது இன்னொரு விடயத்தையும் யூகித்துள்ளனர்.
அதாவது பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் ரேஸில் முதல் நாளிலேயே இரண்டு போட்டியாளர்களுக்கு ரசிகர்களிடம் இருந்து அதிகளவான சப்போர்ட் கிடைத்துள்ளது. அது வேறு யாருமில்லை. நடிகர் பிரதீப் ஆண்டனி, பாடகர் யுகேந்திரன் ஆகிய இருவரும் தான். இவர்கள் இருவரும் கட்டாயம் 100நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் எனக் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது கூல் சுரேஷ் மக்கள் மனதில் இடம் பிடித்தாலும் அவரால் நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்குப் பிடிக்க முடியாது எனவும் கூறி வருகின்றனர். இவர்கள் கூறுவது உண்மை தானா என்பது போகப் போக தெரிய வந்துவிடும்.
Listen News!