விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
கண்ணன் வாங்கிய கடனால் கதிர் ஜெயிலுக்கு போன கதிரை ஒரு வழியாக மூர்த்தி வெளியில் எடுத்து விட்டார். இதனை அடுத்து முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது. இதனால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தொடர்ந்து தனம் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதால் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் காட்டுகின்றார். இந்த விஷயம் மீனாவுக்கும் தெரிந்து விட்டதால் இருவரும் புற்றுநோய் இருக்கின்றதா என்பதைக் செக் பண்ண டெஸ்ட் எல்லாம் எடுத்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தனம் எடுத்த டெஸ்ட் ரிசல்ட் வந்ததால் மீனாவும் தனமும் ஹாஸ்பிட்டலுக்கு சென்று கேட்கின்றனர். அப்போது டாக்டர் தனத்திற்கு புற்றுநோய் இரண்டாம் கட்டத்திற்கு வந்து விட்டதாக சொல்ல இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
மீனா இதனை வீட்டில் சொல்லலாம் எனற சொல்ல தனம் வேண்டாம்.இதனை யாருககம் சொல்ல வேண்டாம் எனத் தடுத்து விடுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது எதிர்வரும் நாட்களில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!