• Sep 20 2024

ஐஸ்வர்யாவை திட்டிக் கொண்டே இருக்கும் அவரது சித்தி- பதிலடி கொடுத்த மூர்த்தி- தனம் சொன்ன அட்வைஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி ஐஸ்வர்யாவுக்கு ஹாஸ்பிட்டலுக்கு பணம் கட்ட சொல்லி பணம் கொடுத்திட்டு போனதால் தனம் அதைக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு போகின்றார். அங்கே ஹாஸ்பிட்டலுக்கு பில் கட்டல கட்டிடுங்க என்று நேர்ஸ் வந்து சொல்ல ஐஸ்வர்யாவின் சித்தி கடுப்பாகின்றார். அப்போது தனத்தின் அண்ணா வந்து நான் கட்டுகிறேன் பில்லை கொடுங்க என்று சொல்லி வாங்குகின்றார்.

இருந்தாலும் ஐஸ்வர்யாவின் சித்தி நாம எதுக்குங்க கட்டணும் என்று திட்ட அந்த நேரம் தனம் வந்து பில்லை கொடு அண்ணே நான் கட்டுறேன் என்று பில்லை வாங்கி கதிரிடம் பணம் கொடுத்து பில்லை கொடுத்து கட்ட அனுப்புகின்றார். பின்னர் எல்லோரும் சேர்ந்து ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர்.


அப்போது தனம் முல்லையிடம் ஐஸ்வர்யாவை ஆரத்தி எடுக்க சொல்ல ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார். கண்ணன் இல்லாததை நினைத்து அழ எல்லோரும் சமாதானப்படுத்த அந்த நேரம் மூர்த்தியும் வந்து சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கின்றார்.மூர்த்தி குழந்தையை அப்பா அம்மா முன்னாடி வைத்து கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி குழந்தை பிறந்த நேரம் தான் சரி இல்லை ஜாதகம் பார்க்கனும் என்று சொல்ல மூர்த்தி திட்டுகின்றார். குழந்தை வந்த நேரம் நல்லா தான் இருக்கு என்று சொல்கின்றார். பின்னர் ஐஸ்வர்யா தனம் சித்தி மூவரும் பேசிட்டு  இருக்கும் போது சித்தி தன்னிடம் வட்டிக்கு வாங்கிய பணத்தை பற்றி கேட்கின்றார்.

கண்ணனுக்கு இப்போ வேலையும் போய்ட்டு எப்பிடித் தான் தரப் போறியோ பணத்தை உங்க விளையாட்டில நானும் சேர்ந்து படுறபாடு இருக்கே என்று திட்டுகின்றார். தனம் நீ பணத்தை கொடுத்திடுவ தான என்று சொல்ல தனமும் தான் கொடுப்பதாக சொல்கின்றார். பின்னர் ரூமுக்குள் முல்லையும் மீனாவும் குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க ஐஸ்வர்யாவும் பக்கத்தில் சென்று கண்ணன் இல்லாததை நினைத்து அழுகின்றார்.


அப்போது தனம் ஐஸ்வர்யாவிடம் இதுக்கெல்லாம் என்ன காரணம் பார்த்தியா நீ தனியப் போகனும் என்று நினைச்சது தப்பு இல்லை அதுக்காக எப்பிடி வாழனும் என்று எடுத்த முடிவ தான் தப்பு என்று சொல்ல எல்லோரும் யோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement