இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் விடுதலை. இவர்களுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாகி வருகின்றது.ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ஒன்னோடு நடந்தா" சில நாட்களுக்கு முன் வெளியானது. இளையராஜா இசையில் வெளியான இப்பாடலுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
இந்நிலையில் விடுதலைப்படம் மார்ச 31 ஆம் திகதி திரையரங்கில் வெளியாக உள்ளது.இவ்வாறுஇருக்கையில் இப்படத்தில் பணிபுரிந்து, நடித்தவரும், டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்தவருமான தமிழரசன் யூடியூப் தளத்துக்கு ஒன்றிற்கு பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், பேசிய அவர், நடிகர் சூரி குறித்தும், சண்டைக்காட்சி குறித்தும் பேசும்போது, டிரெய்லரில் சூரிக்கு தலையில் அடிபடுவதாக வரும் கிளைமாக்ஸ் காட்சி 15 நாட்கள் படமாக்கப்பட்டதாகவும், நிஜமாகவே அந்த காட்சியில் அவரது தலையில் அடிபட்டதாகவும் அதற்கு காரணம், ரோப் மிஸ் ஆனதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு சூரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்துவிட்டார்கள் என குறிப்பிட்டவர், முன்னதாக சூரிக்கு கையில் அடிபட்டு கையை தூக்க முடியாதளவாய் இருந்ததாகவும் அதனால் நடிகர் சூரி வொர்க் அவுட் கூட பண்ண முடியாமல் ஒல்லி ஆகிவிட்டதாகவும் அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இப்படத்துக்காக சூரி தயாராக இருந்ததாகவும் தமிழ் தெரிவித்துள்ளார்.
Listen News!