விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ணுடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் வெற்றிக்கு சுடர் தன்னுடைய குழந்தை என்ற உண்மை தெரிந்து விட்டது.
ஆனாலும் யாரிடமும் இதனைக் காட்டிக் கொடுக்காமல் நடக்கின்றார்.குறிப்பாக அபிக்கு தெரிந்தால் அபி சுடரை எங்கையாவது கூட்டிட்டு போய் விடுவார் என்பதற்காக இதனை ரகசியமாக வைத்திருக்கின்றார்.
இப்போது சுடருக்கும் அபிக்கும் சிலம்பம் கற்றுக் கொடுக்கின்றார். இது ஒரு புறம் இருக்க தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சுடர் பொண்ணுங்கள எதுக்கு கடத்திறாங்க என்று கேட்க வெற்றி பொண்ணுங்கள ஒரு போதைப் பொருளாத் தான் பார்க்கிறாங்க அதான் கடத்திறாங்க என்று சொல்கின்றார்.
தொடர்ந்து பெப்பர் ஸ்பிரேயை எடுத்து சுடர் கிட்ட கொடுப்பதோடு அதனை எப்படி அடிப்பது என்று அடித்துக் காட்டுகின்றார். அப்போது வெற்றியின் கண்ணில் பட்டு வெற்றி எரிச்சல் தாங்க முடியாமல் கத்துகின்றார். இதனைப் பார்த்த அபி அவரது கண்ணுக்கு மருந்து விட்டு குணமாக்குகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!