விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன்.இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
இந்நிலையில் ரக்சன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தினை பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை இரா.கோ. யோகேந்திரன் இயக்குகிறார். இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார்,
இந்தப் படத்தில் கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது என தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!