'ஜூம்மான்டி நாடம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை டாப்ஸி. இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'ஆடுகளம்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் தடம் பதித்தார். இதனைத் தொடர்ந்து பல மொழிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.
இதையடுத்து தெலுங்கில் அதிகளவிலான படங்களை நடிக்க ஆரம்பித்த டாப்ஸி. தமிழிலும் அவ்வபோது வந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். இதனிடையே அவருக்கு பாலிவுட் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எனினும் குறிப்பாக இந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த பிங்க் திரைப்படம் வேறலெவலில் ஹிட்டானது. இப்படம் தான் தமிழில் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக் ஆனது. இதேபடம் தெலுங்கிலும் வக்கீல் சாப் என்கிற பெயரில் ரீமேக் செய்யட்டது.
அத்தோடு நடிகை டாப்ஸி கைவசம் தற்போது ஜன கண மன மற்றும் ஏலியன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ஜன கண மன படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் டாப்ஸி. இப்படத்தை அஹமத் இயக்கி வருகிறார்.
இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, நேற்று மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அதாவது உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி உடை அணிந்து பேஷன் ஷோவில் நடிகை ராஷ்மிகா ரேம்ப் வாக் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
Listen News!