ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் 88ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் சைக்கிள் டாஸ்க் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. இதில் விக்ரமன் ரச்சிதா அமுதவாணன் மற்றும் இறுதியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இறுதியாக விக்ரமன் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார். இந்த டாஸ்க்கில் சரியாக விளையாட முடியவில்லை என அசீம் தனது மனவருத்தங்களையும் தெரிவித்து வந்தார்.
தொடர்ந்து இன்னொரு டாஸ்க் நடைபெற்றது. அதாவது ஒரு பைப் ஒரு இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும் இதனை கயிறு அழுத்தல் மாதிரி இரண்டு பக்கங்களில் இருந்தும் இரண்டு பேர் இழுக்க வேண்டும். இவ்வாறு அந்த டாஸ்க்கில் அசீம் முதலாவதாக வெற்றி பெற்றார். அமுதவாணன் இரண்டாவதாக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது டாஸ்க் ஆரம்பிக்கப் போவதற்காக பிக்பாஸ் தங்களுடன் மோதப் போகும் போட்டியாளர்கள் யார் என்பதைத் தெரிவு செய்ய சொல்லும் போது அசீம் ரச்சிதாவுடன் மோதனும் என்று கூறும் போது ரச்சிதாவும் ஷிவினும் மறுத்து விட்டனர். இதனால் அசீம் இந்த வீட்டில எல்லாரும் சேஃவ் கேம் விளையாடுறாங்க என்று தெரிவித்தார்.இதனால் ஏடிகே அசீமை திட்டினார். இவருடன் சேர்ந்து ஏனைய போட்டியாளர்களும் அசீம் மீது சரியான கோபத்தில் இருந்தார்கள்.
அதன் படி கூடைப் பந்து மாதிரி ஒரு விளையாட்டு நடந்தது. இந்த கேமிலும் அமுதவாணன் வெற்றி பெற்றார். டாஸ்க் முடிநததைத் தொடர்ந்து அசீம் கமெரா முன்னாடி சென்று தனது மகனுக்கு இன்று பிறந்தநாள் என்று சொல்லி மகன் கிட்ட பேசிட்டு இருந்தார். அதிலும் குறிப்பாக நான் டைட்டில் வின் பண்ணிட்டு உன்னை வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அழுதார். இந்த எமோஷனாலான பதிவு பார்வையாளர்களையும் மனமுருகச் செய்தது. இவரின் இந்தப் பதிவுடன் இந்த எப்பிஷோட் முடிவடைந்தது எனலாம்.
Listen News!