விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்த நடிகை தான் ஓவியா. இவர் தமிழ் திரையுலகில் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இது தவிர ஓவியா, மெரினா, கலகலப்பு , மதயானைக் கூட்டம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்ற இவருக்காக ஆர்மியும் துவங்கப்பட்டது.
இருப்பினும், அதன் பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனால் முன்பை விட அதிக கவர்ச்சியில் இறங்கி விட்டார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஓவியா, கலாச்சாரம் என்ற பெயரில் குழந்தைகளிடம் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக எல்லாவற்றையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும்.
மேலும் , பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பேசி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு, ரசிகர் ஒருவர் சுய இன்பம் நல்லது என்று பேசியிருந்தார். அதற்கு ஓவியாவும் உடனடியாக உண்மை என்று பதிலளித்திருந்தார். ஓவியாவின் இந்த பதில் பெரும் சர்சையை கிளப்பியுள்ளதோடு கலாச்சாரம் பற்றி பேசும் நீங்கள், கடந்த ஆண்டு சுய இன்பம் பற்றிய கேள்விக்கு உண்மை என்று சொன்னது ஏன்..? இல்லை மறந்து விட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த விஷயத்தை தற்போது நெட்டிசன் மீண்டும் தோண்டி எடுத்து வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!