இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினி அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.
பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்துள்ளார்.
படத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத். இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ரஜினி பல விடயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதாவது "படம் வெற்றி பெற்றால் அதற்காக கஷ்டப்பட்டவர்கள் அனைவரையும் எப்படி கௌரவிக்க வேண்டும் என்பதற்கு கலாநிதி மாறன் சிறந்த ஒரு உதாரணமாக இருக்கின்றார், அதுமட்டுமல்லாது ரீ-ரெக்கார்டிங்கிற்கு முன்பு ஜெயிலர் படம் சுமாராக தான் இருந்தது. ஆனால் அனிருத் தனது இசையால் படத்தை சூப்பராக மாற்றி இருக்கின்றார். அவர் தனது பின்னணி இசையின் மூலம் ஜெயிலரை தூக்கி நிறுத்தி உள்ளார், அதேபோன்று இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.
Listen News!