• Sep 20 2024

தனிமையில் இனிமை காண்பது எவ்வளவு சுகம்… கீர்த்தியின் லேட்டஸ்ட் போட்டோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ், இவர் 2002 களில் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி 2013இல் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

விக்ரம் பிரபுவுடன் நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்றி ஆனார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

குறிப்பாக,சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்கள், மற்றும் தளபதியுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்தன.

தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி, சமூகவலைத்தளத்தில் அடிக்கடி போட்டோ ஷூட்கள் செய்து தெறிக்க விட்டு வருகின்றார்.

இவருடைய போட்டோ ஷூட்க்கென்றே ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர். இந்நிலையில் கீர்த்தி தற்போது மழையில் குடை பிடித்துக்கொண்டு தனிமையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பிற செய்திகள்

Advertisement

Advertisement