சினிமா நடிகைகளுக்கு எதிராக பாலியல் ரீதியாக பல பிரச்சனைகள் வருவதுண்டு. அப்படி வாய்ப்பிற்காக காஸ்டிங் கவுட் விசயங்களும் படுத்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி ஏமாற்றத்தில் சிக்கியும் வருகிறார்கள் தற்போதைய காலகட்ட நடிகைகள்.
இதை பலர் வெளிப்படையாக சொல்வதில்லை. அந்தவகையில் தனக்கு நேர்ந்த படுக்கை பகிர்வு சம்பவத்தை இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் வெளிப்படையாக சொல்லியுள்ளார்.
பல சமுக கருத்துக்களை கூறியதோடு தான் நடித்த நிர்வாண காட்சியை பற்றி கேவலமாக விமர்சித்தவரை நடுரோட்டில் நிக்கவைத்து சரமாறியாகவும் திட்டித்தீர்த்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் ரேகா நாயர்.
எனினும் அந்தவகையில் பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வரும் ரேகா தன்னிடம் ஒரு இயக்குநர் கால் செய்து பேசியிருந்தார். அந்த இயக்குநர் காலில் அட்ஜெஸ்மெண்ட் செய்ய கேட்டுள்ளார். அதற்கு ரேகா நாயர், எந்த கோபமும் படாமல் சகஜமாக என்னுடன் படுத்தால் எனக்கு எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று அவரிடமே கேட்டுள்ளார்.
எவ்வளவு வேண்டுமென்று கேட்டதற்கு குறித்த தொகையை சொல்லியுள்ளார் ரேகா. இப்படி பேசுவது எந்த உள்நோக்கத்துடன் என்பதை சுதாரித்த இயக்குனர் சாரி கூறிவிட்டு காலை கட் செய்துள்ளார். இப்படியாக நடிகைகள் வெளிப்படையாக தைரியமாக இதை அணுக வேண்டும் என்றும் ரேகா நாயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Listen News!