• Sep 21 2024

வீட்டுக்குள்ளே எச்சில் துப்பினால் எப்படி?- பாவா செல்லத்துரையால் கதறி அழுத பிரதீப்- செம கடுப்பில் போட்டியாளர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. இதில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பாவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

எப்போது ஒரு வீட்டில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை பிக்பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீடு என்று இரண்டு வீடுகளில் நடக்கிறது. இதற்காக ரூல்ஸ்களும், டாஸ்க்குகளும் புதிதாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.


 கேப்டனை கவர தவறிய ஆறு பேர்; ரூல்ஸை மீறியதற்காக இரண்டு பேர் என மொத்தம் எட்டு பேர் இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் இந்த வாரம் எந்த டாஸ்க்கிலும் கலந்துகொள்ள முடியாது.

இது ஒருபுறம் இருக்க, பாவா செல்லத்துரை இரண்டு கதை சொல்லும் போது வீட்டுக்குள் எச்சில் துப்புகின்றார் என்பதை பிரதீப் அழுது கொண்டே சொன்னாரு. இதைக் கேட்ட பாவா செல்லத்துரை நான் வீட்டில இருக்கிற மாதிரி தான் இங்கேயும் இருக்கின்றேன். மிகவும் எளிமையானவன் என்று என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்பது போல கூறி விட்டு உள்ளே எழுந்து சென்று விடுகின்றார்.


அதைக் கேட்ட எல்லோரும் அதெப்படி வீட்டுக்குள்ளே எச்சில் துப்ப முடியும் என்று தமக்குத் தாமே பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement