• Sep 21 2024

30வயதில் கருவை கலைத்துவிட்டேன்: நடிகை வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு நாள் இரவு ஒருவருடன் சென்ற பிறகு கர்ப்பமானதாகவும், அதனால் அந்த கருவை கலைத்துவிட்டதாகவும் நடிகை குப்ரா சேட் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது 30 வயதில் கருகலைப்பு செய்ததாகவும், அதை நினைத்து கவலைப்படவில்லை என்றும் நடிகை குப்ரா சேட் தெரிவித்திருக்கிறார்.பாலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வரும் குப்ரா சேட் தன் வாழ்க்கையை புத்தமாக எழுதியிருக்கிறார். 'Open Book: Not Quite A Memoir' என்கிற அந்த புத்தகத்தில் தான் 30 வயதில் கருகலைப்பு செய்தது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். தாயாக தயாராக இல்லை என்று அந்த பகுதிக்கு தலைப்பு வைத்திருக்கிறார்.

மேலும் நெருங்கிய நண்பர் ஒருவருடன் அந்தமானுக்கு சென்றேன். அங்கு ஒரு நாள் இரவு அவருடன் உறவு கொண்டேன். அந்த One night stand-ஆல் கர்ப்பமானேன். நான் அப்பொழுது தாயாக தயாராக இல்லை. இதையடுத்து அந்த கருவை கலைத்துவிட்டேன் என்று தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார் குப்ரா.

நான் நன்றாக கட்டுரை எழுதுவேன். கட்டுரைப் போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதை சீரியஸாக எடுத்தது இல்லை. என் வாழ்க்கை பற்றி எழுத நான் வெட்கப்படவில்லை.

எனினும் கடந்த கால நினைவுகள் நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவில்லை. மேலும் அந்த கதைகளை எனக்குள் புதைத்து வைக்க விரும்பவில்லை. அதனால் தான் புத்தம் எழுதியிருக்கிறேன் என்கிறார் குப்ரா.

கருக்கலைப்பு குறித்து பேட்டி ஒன்றில் குப்ரா கூறியதாவது,

நான் தயாராக இல்லை. சொல்லப் போனால் நான் தற்போதும் தாயாக தயாராக இல்லை. கருவை கலைத்தது குறித்து வருத்தப்படவில்லை. பெண்கள் 23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், 30 வயதுக்குள் தாயாக வேண்டும் என்கிற அழுத்தம் எனக்கு புரியவில்லை என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement