• Sep 20 2024

என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்- மகளை இழந்த விஜய் ஆண்டனி போட்ட மனதை உருக்கும் பதிவு

stella / 11 months ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். இதில், மூத்த மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம்போல படுக்கை அறைக்கு உறங்க சென்றனர். மூத்த மகளும் தனக்கான அறைக்கு சென்றார். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மீரா கடந்த ஓராண்டாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக காவேரி மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் மன அழுத்தம் காரணமாகவே அவர் இப்படி இறப்புக்குள்ளானார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் நேற்றைய தினம் மீராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகளை இழந்த விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது அன்பு நெஞ்சங்களே எனது மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி,மதம்,பணம்,பொறாமை,வலி,வறுமை இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத் தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது  அவளுக்காக நேரம் செலவழிக்க ஆரம்பித்து விட்டேன்.அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் என்றும் தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement