• Sep 20 2024

எனக்கு இருட்டை கண்டால் பயம்..என்னது இப்படி சொல்லிட்டாங்களே அலியாபட்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அலியாபட் இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் பெண் ஆவார். மேலும் இவர் 1999 -ல் 'சங்கர்ஷ்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அலியாபட்.


மேலும் இவர் கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் (2012) இல் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதுமட்டுமல்லாமல் "சூஹா சாஹா" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடியிருந்தார் அலியாபட்.


மேலும் இவரது திறமைக்கு கிடைத்த பரிசாக  இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும் இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.


அலியாபட் அதிரடி சண்டை படங்களில் வீர தீரமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அலியா பட்டுக்கு இருட்டை கண்டால் பயமாம். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் "எனக்கு இருட்டை பார்த்தால் பயம். இதை நிக்டோபோபியா என்று சொல்கிறார்கள்.


சிறுவயதில் எனை பயமுறுத்த அக்கா, விளையாட்டாக இருட்டு அறையில் என்னை தாழிட்டுவிட்டார். நிறைய நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு வந்து ஓடி வந்து கதவை திறந்தார். ஆனால் அதற்குள் நான் அழுது புலம்பி பயத்தில் ஓடிவிட்டேன் என பேட்டி ஒன்றில் கூறிஉள்ளார் அலியாபட்.

Advertisement

Advertisement