காமெடி கலந்த ஆக்ஷன் படங்களை இயக்கக்கூடிய இயக்குநர் தான் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் மாநாடு என்னும் திரைப்படம் இறுதியாக வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருப்பதோடு இப்படம் சூப்பர் வெற்றியையும் பெற்றது.
ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு இப்போது முழுநேர இயக்குநராக மாறியுள்ளார். சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இப்படத்தில் புதுமுகங்களே நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 50வது திரைப்படமாக மங்காத்தாவில் அஜித்தை நெகட்டிவ் ரோலில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டி மிரட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மாநாடு திரைப்படம் இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யா தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் . இவ்வாறு தனது ஒவ்வொரு படங்களிலும் புது புது முயற்சிகளை செய்து வரும் இயக்குநர் வெங்கட் பிரபு தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சிம்பு, தனுஷை ஒன்றாக வைத்து பேஸ் ஆஃப் மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என ஆசையாக உள்ளது என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சக போட்டியாளராக கருதப்படும் தனுஷ் மற்றும் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் பேஸ் ஆஃப் மாதிரி ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கும்போதே வேற லெவலில் உள்ளது. ஆனால் வெங்கட்பிரபுவின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
பிற செய்திகள்
- குக்வித் கோமாளி ஸ்ருதிகா கணவருடன் ஆட்டம் போடும் மணிமேகலை மற்றும் ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ
- புஷ்பா மற்றும் கேஜிஎப் படங்களுக்கு தமிழில் டப்பிங் பேசிய நடிகர் யார் தெரியுமா?- வைரலாகும் பிரபலத்தின் பேட்டி
- ‘கவர்ச்சியாகத்தான் நடிச்சேன் ஆனால் அவுத்துப் போட்டு நடிக்கல’- விமர்சகரை திட்டி தீர்க்கும் நடிகை ஷகீலா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!