• Sep 20 2024

"நானே ஷாக்கிங்ல தான் இருக்கேன்"…ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள பானுப்ரியாவின் சகோதரி…அவரே கூறிய சுவாரஷியமான தகவல்…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் 1980 களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக விளங்குபவர் நடிகை சாந்திப்ரியா. இவர் நடிகை பானுப்பிரியாவின் இளைய சகோதரியாவார். இவர்கள் இருவரும் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல முன்னணி நாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றனர்.

நடிகை சாந்திப்ரியா தனக்கென ஒரு தனித்துவமான பாணியில் நடித்து 1980களில் இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இவர் பல மொழிப் படங்களில் பல கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் 1987 இல் வெளியான 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்ற திரைப்படத்தில் 'செண்பகம்' என்ற வேடத்தில் நடித்ததன் மூலமே சினிமாவில் அறிமுகமானார் .

இவரது நடிப்பில் வெளியாகிய 'ஒன்று எங்கள் ஜாதியே, நேரம் நல்லா இருக்கு , மஹர்ஷி, சர்க்கரை பந்தல், ரயிலுக்கு நேரமாச்சு, என் வழி தனி வழி' போன்ற பல மொழிப் படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தமை இவரது நடிப்பு திறனிற்கு கிடைத்த ஒரு பெருமையாகும்.

இந்தநிலையில் அண்மையில் இவர் பிரபல தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றின் போது பல தரப்பட்ட கருத்துக்களை சமூக வெளியில் பகிர்ந்திருந்தார். அந்தவகையில் தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, காதல் திருமணம், தனது குழந்தைகள் குறித்த விடயம் மற்றும் தனது தாயைப் பற்றிப் பெருமையாகக் கூறிய நடிகை சாந்திப்ரியா மற்றுமொரு முக்கியமான தகவலையும் பகிர்ந்திருந்தார்.

அது என்னவெனில் உத்தர பிரதேசத்தின் முன்னால் கவர்னர் ஆக பணியாற்றிய மறைந்த கௌரவ சரோஜினி நாய்டுவின் வாழ்க்கை வரலாறு அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கௌரவ சரோஜினி நாய்டுவாக நடிக்க ஒப்பந்தமாகி இவர் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இவர் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது அந்த நேர்காணலில் "இந்த படத்தில நடிக்க உங்களுக்கு சான்ஸ் கிடைத்தமை பற்றி நீங்க எப்பிடி பீல் பண்ணுறீங்க?" என கேள்வி ஒன்றிணையும் கேட்டிருக்கின்றார்கள். இதற்கு சாந்திப்ரியா "நானே இன்னமும் அந்த ஷாக்கிங்ல தான் இருக்கேன் நீங்க வேற" என சிரிச்சுக்கிட்டு பதிலளித்திருக்கின்றார்.

இவரின் இந்த நேர்காணல் ஆனது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இவர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை இவர் ஆச்சரியப்படுத்த உள்ளமையால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement