தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்றவர்கள் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சீரியலில் ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் தான் கவர்ந்த பரத். இவர் தற்போது சினிமாவை நடப்பதை விட்டுவிட்டு தனியாக ஐஸ்கீரிம் டிரக் ஓன்று நடத்தி வருகிறார்.
இதனால் திடீரென இவர் நடிப்பை விட்டு விட்டு இப்படி சொந்த தொழிலில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று பல்வேறு ஊடகங்களும் அவரை பேட்டி எடுத்து வருகின்றது. அந்த வகையில் அவர் ஒரு ஊடகத்திற்கு கூறியதாவது நான் நான்காவது படிக்கும் போது இங்கிலீஷ்காரன் படத்தில் சரத்குமார் அவர்களுடன் இணைந்து நடித்த பின்னர் சொர்க்கம் “சீரியலில்” என்ற சீரியலில் நடித்தேன்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் என்ற விஷ்கம் கல்லூரியில் படித்தேன் அதற்குப் பிறகு தொழில் தான் என்பதில் உறுதியாக இருந்தேன். சினிமா துறையை பொறுத்தவரை நாம் எப்போது உயரத்திற்கு செல்வோம் எப்போது கீழே வருவோம் என்று யாருக்குமே தெரியாது.
நான் வானத்தைப் போல திரைப்படத்தில் நடிக்கும் போது விஜயகாந்த் சேரோட தோளில் இருந்து போகும் போது நல்லா இருந்திச்சு.அந்த படம் மட்டுமில்ல மாதவனின் ப்ரியமான தோழி படத்திலையும் நடிச்சிருக்கிறேன். இது தவிர விஜய் விக்ரம் ஆகிய பிரபலங்களின் படத்திலும் நடித்திருக்கின்றேன்.
சினிமாவைப் பொறுத்த வரைக்கும் என்னுடைய வாழ்க்கை இன்னொருத்தங்களுடைய கையில் இருக்கு ஆனால் இங்க சொந்த தொழில் என்னும் போது இது என்னுடைய கையில் தான் இருக்கு. முதலில் இந்த தொழிலை நல்ல படியாகக் கொண்டு வருவோம்.அதுக்கு பிறகு சினிமாவில் நடிப்போம் என்று நிறுத்தி வைத்திருக்கின்றேன்.
எனக்கு இப்போதும் சீரியலில் குறும்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்குது. ஆனால் நான் தான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு என்னுடைய தொழிலை முன்னேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றேன்.சினிமாவில் நடிப்பதற்கு வயது வரம்பு கிடையாது அடிக்கத் தெரிந்தால் போதும் எனக்கு நடிப்பும் நல்ல கதாபாத்திரமும் முக்கியம் அப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தால் இன்னும் ஒரு வருடங்களில் கண்டிப்பாக நடிப்பேன் என்று நினைக்கிறேன் .
பல சேனல்கள் என்னிடம் பேட்டி எடுக்க வரும்போது அவர்களுடைய youtube சேனல் இவரின் நிலைமையை பார்த்தீர்களா என்று போடுவார்கள். நான் என்ன பிச்சையா எடுக்கிறேன் தொழில் நான் செய்கிறேன். ஏன் அதை தொழில் சாதிக்கும் நடிகர் எனப் போட்டால் நன்றாக இருக்கும் என தோன்றும். ஆனால் அது அவர்களுடைய விருப்பம் அவர்கள் பார்வையாளருக்காக வைக்கின்றனர் அதை ஒன்றும் சொல்ல முடியாது.
பின்னர் தன்னுடைய தாய் பற்றி கூறிய நடிகர் பரத் எனக்கு அனைத்துமே என்னுடைய அம்மா தான். அவர்கள் சொன்னால் நான் மறுப்பு சொல்லவே மாட்டேன். ஆனால் நான் சமீபத்தில் தவறி விட்டார். அவர்க்ளின் இழப்பில் இறுத்து வெளியில் வருவதற்கு எனக்கு 2 முதல் 3 மாதங்கள் வரையில் ஆனது. என்னுடைய உறவினர்கள் என்னை நானே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வந்தவுடன் தான் என்னை விட்டு சென்றனர். அவர்களின் நினைவு மீண்டும் வராமல் இருக்கத்தான் தொழில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தொடக்கத்தில் பல தவறுகள் செய்துதான் இந்த தொழிலை கற்றுக் கொண்டேன். பல முயற்சிகள் சில சமயங்களில் ஒண்டுமில்லாமல் போனது. நான் நல்லவர் என்று நினைத்து ஒருவரை நான் தொழிலில் சேர்த்த போது பின்னர் தான் தெரிய வந்தது அவரைப் பற்றி எனவே அவரிடமிருந்து நான் விலகி விட்டேன். ஒருவேளை அவரிடம் இன்னும் கொஞ்ச நாட்கள் பயணித்து இருந்தால் என்னுடைய தொழிலை மொத்தமாக மொத்தமாக இழந்திருக்க நேரிடும் என்று அவர் அந்த பேட்டியில் கூறினார்.
Listen News!