• Sep 20 2024

ரஜனிகாந்தின் மகளாய் நான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றேன்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.ஆரம்ப காலத்தில் பஸ் நடத்துனராக வேலை பார்த்த இவர், 1973 இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால்பதித்தார்.

தமிழ் திரையுலகில் ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இவ்வாறுஇருக்கையில் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர், மேலும் அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.

அத்தோடு ஐஸ்வர்யா இயக்குநராக வை ராஜா வை திரைப்படத்தை இயக்கியிருந்தார், அப்படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு ஈவண்ட்-ல் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நட்சத்திரத்தின் குழந்தையாக இருப்பதன் அழுத்தம் குறித்து கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது “வெளியில் இருப்பவர்களை விட நட்சத்திர குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஏனெனில் மக்கள் எப்போதும் அவர்கள் மீது தங்களின் கண்கள் வைத்திருப்பார்கள்.

திரைப்பட தொழிலில் நுழைந்தவுடன் அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள்” என பேசியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement