• Sep 21 2024

இப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கு இவரை ஒரு முறை தான் பார்த்திருக்கின்றேன்- கலாய்த்த லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பத்திரிகையதளர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா இன்றைய தினம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ்,பத்திரிகையாளர் தேவிமணி ஆகியோர் விருந்தினராக கலந்து கெண்டனர்.

இதில் இயக்குநர் பாரதிராஜாவும் பங்கேற்றார். அப்போது பேசிய இயக்குநர் லோகேஷ், "பாரதிராஜா சாரை என் வாழ்நாளில் ஒரு முறை தான் பார்த்துள்ளதாகக்" கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது அருகில் உட்காரும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், "என்னுடைய முதல் படம் துவங்கி இப்போது 'விக்ரம்' வரையிலும் பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்நாளில் நிச்சயம் ஈடு செய்ய முடியாதது. பத்திரிகையாளர்கள் எனக்கு கொடுத்த ஆதரவு தான் இன்று இப்போது இந்த இடத்தில் நான் நிற்க காரணம். ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் ஆதரவும் உதவியும் சொற்களால் அடக்க முடியாது" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு விக்ரம் பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement