• Sep 21 2024

நான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.. கவிஞர் சினேகன்…நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கார்த்தி நடித்து இருக்கும் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் அந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர் சினேகனுக்கு அழைப்பே வரவில்லையாம். அதை பற்றி சினேகன் வருத்தத்துடன் வேறொரு படத்தின் விழா மேடையில் பேசியதும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில் இன்று சென்னையில் விருமன் படத்தின் பிரெஸ் மீட் நடைபெற்றது. அதில் சினேகனும் பங்குபற்றினார்.

"அன்று பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாடலாசியர்களுக்கு மரியாதை குறைந்துகொண்டிருக்கிறது என கூறி தான் அப்படி பேசினேன். சூர்யா, கார்த்திக்கு பல ஹிட் பாடல்கள் கொடுத்து இருக்கிறேன். பருத்திவீரன் படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன்."

"இன்று எனக்கு அழைப்பு வந்தாலும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் இருந்தேன். ஆனால் வரவில்லை என்றால் நான் இன்னும் அதிகம் கோபத்தில் இருக்கிறேன் என மீடியாவில் பெரிதாக பேசுவார்கள் என்பதால் தான் நான் வந்தேன்" என சினேகன் தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement