• Sep 20 2024

'நான் ஆண்களை தாக்குகிறேன், இதனால் தான் என்னை யாரும் திருமணம் செய்யவில்லை'- நடிகை கங்கனா ரணாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தைத் தொடர்ந்து பாலிவூட் திரையுலகில் படவாய்ப்புகள் குவிந்ததால் அதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

அதிலும் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தலைவி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது Dhaakad என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் ஸ்பை ஏஜென்ட் ரோலில் நடித்திருக்கின்றார் என்பதும் முக்கியமாகும்.

இது தவிர லாக்அப் என்ற ரியாலிட்ரி ஷோவையும் தொகுத்து வழங்கி வருகின்றார். சமூக வளைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு விமர்சிக்கப்பட்டும் வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கங்கனா அளித்த பேட்டியில் தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என தெரிவித்து இருக்கிறார். அதாவது தன்னை பற்றி தவறான பல வதந்திகள் பரவுவதால் தான் தன்னை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை என கூறி இருக்கிறார்.

மேலும் நான் ஆண்களை தாக்குகிறேன், அதிகம் சண்டை போடுகிறேன் என சில வதந்திகள் வருவதால் தான் இப்படி என் பெயர் கெட்டுவிட்டது என கூறி இருக்கிறார் என்பதும் முக்கியமாகும்.

Advertisement

Advertisement