• Sep 20 2024

ஆபாச செய்தி பரப்பிய ரசிகர்களால் தான் இதற்கு அடிமை ஆனேன்-குமுறும் பிரபல நடிகையின் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தேஜஸ்வி மதிவாடா.இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.


கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தேஜஸ்வி சினிமாவில் நடித்து வருகிறார்.அத்தோடு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தேஜஸ்வி


தமிழில் நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.வாய்ப்புக்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற கலாசாரம், சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக தேஜஸ்வி சமீபத்தில் கூறியிருந்தார்.


சினிமாவில் தேஜஸ்வி அறிமுகம் ஆன சமயத்தில் பாலியல் ரீதியான அழைப்புகள் வந்ததாக தேஜஸ்வி தெரிவித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தெலுங்கு நடிகர் கவுஷலின் ரசிகர்கள் தன்னை ஆபாசமாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.


இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப் பழக்கத்தை கையில் எடுத்ததாகவும், பின்னர் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார் தேஜஸ்வி.இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றது.




Advertisement

Advertisement