• Sep 20 2024

கடன் பிரச்சினையால் தான் நடிக்கவே வந்தேன்-நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அத்தோடு சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இவர் நடிப்பில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் பல விருதுகளையும் பெற்றது. இவரின் திரை படங்கள் ஒவ்வொன்றும் கமர்சியல் ரீதியாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களையும் உள்ளடக்கி வருகிறது.

இவ்வாறு பிரமாண்ட வளர்ச்சி கண்டிருக்கும் இவர் நேருக்கு நேர் படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை கண்டு அதன் பிறகு நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் நடிகர் சூர்யா கடன் பிரச்சினையால் தான் நடிக்க வந்ததாக கூறியுள்ளார். மேலும் நடிக்க வந்த புதிதில் தான் பட்ட அவமானங்கள் குறித்தும் எனக்கு என்ன வராது என்று சொல்கிறார்களோ அதைச் செய்து காட்ட வேண்டும் என்ற வெறிதான் இப்பொழுது என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என்றும் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement