நடிகை காயத்ரி யுவராஜ் சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரின் மாயன் கதாப்பாத்திரத்திற்கு தங்கையாக நடித்திருந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ள இவர் அதன் பிறகு முழுநேர வில்லியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் பிரியசகி, மெல்ல திறந்தது கதவு, அழகி, களத்துமேடு, மோகினி போன்ற தொடர்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ;பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்....சாங்-க்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்ராக்கிராமில் பகிர்ந்துள்ளார்.
Listen News!