• Sep 20 2024

அதுக்குள்ளே சேர் முடித்து விட்டாரா என்னாலேயே நம்ப முடில- மணிரத்னம் சொன்ன விடயத்தால் ஷாக்கான ஜெயம்ரவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவல் தான் பொன்னியின் செல்வன். இயக்குநர மணிரத்தத்தின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.


இதையடுத்து இந்தியா முழுவதும் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் படம் சம்மந்தமாக ஒரு சுவாரஸ்யமான தகவலை ஜெயம் ரவி பகிர்ந்துள்ளார். இயக்குநர் ராஜமௌலியிடம் இரண்டு பாகங்களையும் சேர்த்து 150 நாட்களுக்குள் படமாக்கி முடித்ததை சொன்ன போது அதைக் கேட்டு அவர் ஆச்சரியப்பட்டாராம்.

“எப்படி முடித்தீர்கள் அதற்காக எப்படி திட்டமிட்டு வேலை செய்தீர்கள்” போன்ற விஷயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார் என ஜெயம் ரவி கூறியுள்ளார். இது தவிர இன்னும் பல ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பங்குபற்றி வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement