பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று தனலக்ஷ்மி வெளியேறியிருந்ததார்.வலுவான போட்டியாளராக இருந்த தனம் வெளியேறியது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது வீட்டில், ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், விஜே கதிரவன், விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 9 போட்டியாளர்கள் உள்ளனர்.அந்த வகையில் 76ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
முதலில் இந்த வாரத்திற்கான தலைவருக்கான போட்டி நடைபெற்றது. அதில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் போட்டியிட்டு அமுதவாணன் தலைவராகத் தெரிவாகினார். அதனைத் தொடர்ந்து நாமினேஷன் ஓபனாக நடந்தது. அதில் ரச்சிதாவைத் தவிர அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.
ரச்சிதாவுக்கு அனைவரும் மஞ்சள் காட் கொடுத்ததோடு அவர்கள் கூறிய காரணம் ரச்சிதாவை கடுப்படையச் செய்தது.இதனால் அப்செட்டாக இருந்தார் ரச்சிதா. மேலும் அமுதவாணன் வீட்டில் அனைவரின் உழைப்பை பயன்படுத்தி அமுதவாணன் விளையாடுகின்றார் என்று கூறினார்.
இதனால் கதிரவன் கூறியது தவறு என்று கூற வந்த போது ஏடிகேவுக்கும் கதிரவனுக்கும் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மைனாவை நாமினேட் செய்த காரணம் பிடிக்காததால் அவர் விக்கிரமனிடம் அதற்கு விளக்கம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு விக்ரமன் அப்படியே மழுப்பி சமாதானம் செய்து விட்டார்.
தொடர்ந்து நாமினேஷனில் நடந்த விடயங்களை ஒவ்வொருத்தராக பேசிட்டு இருந்தனர். அதன்பின்னர் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி மணிக்கூடு டாஸ்க் கொடுக்கப்பட்டது.இது இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!