• Sep 20 2024

என் குழந்தைகளை படிக்க வைக்க முடில, மடத்தில சேர்த்து விட்டுட்டேன்- கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்த நளினி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் தான் நளினி. இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்க போட்ட இவர் குடும்ப வாழ்வில் அக்கறை செலுத்தி வந்தார்.

பின்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்ட இவர்ஜெயம் படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் நுழைந்து மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றார். தற்பொழது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மோதலும் காதலும் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.


நடிகை நளினி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நானும் அவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதும் குடும்பத்தை சமாளிப்பது சிரமமாக இருந்தது. அப்போது என் இரண்டு குழந்தைகளும் பெரிய ஸ்கூலில் படித்துக்கொண்டு இருந்தனர். என்னால ஸ்கூல் பீஸ் கட்ட முடியாததால் என் இரண்டு குழந்தைகளும் கோபிலா மடத்தில் சேர்ந்து படித்தார்கள்.

இங்கு நல்ல படிச்சி இன்றைக்கு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் அருண்,அருணாவின் அம்மா என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று படிபடி என்று ஹிட்லர் மாதிரி அடிப்பேன். இப்போது அவர்கள் நல்ல வேலையில் அவர்களின் சம்பளம் கூட எனக்கும் தெரியாது. நாங்கள் மூவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.


மேலும், எனக்கு குண்டா இருக்கிறது ரொம்ப பிடிக்கும். மேலும், என் பையன், அம்மானா இப்படித்தான் இருக்கணும், நீ ஹீரோயின் ஒல்லியா இருந்த காலமெல்லாம் போயிடுச்சு,  நீ நல்லா சாப்பிட்டு நல்லா இரு மா என்பார் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement