நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து அவர் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கும் அனிமல் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். ஆனால் காதலை பற்றி வெளிப்படையாக அவர்கள் அறிவிக்கவில்லை.
இனிநிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார், பேபி என்ற அந்த படத்தினை பற்றி தற்போது ராஷ்மிகா ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
"அந்த படத்தை பார்த்து தியேட்டரிலேயே அழுதுவிட்டேன். ஒவ்வொரு காட்சியும் என் இதயத்தில் நீண்ட காலத்திற்கு இருக்கும்" என அவர் கூறி இருக்கிறார்.
Listen News!