• Sep 20 2024

விஜய்யின் குஷி படத்தில் வேண்டுமென்றேதான் அப்படி செய்தேன் - மனம் திறந்த ஜோதிகா..! என்ன சொல்லியிருக்காரு பாருங்க ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜோதிகா அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.வாலி படத்தை முடித்துவிட்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா.

அவர் இயக்கிய முதல் படமான வாலி மெகா ஹிட்டாகியிருந்தது. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டராக வலம் வர ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியதன் மூலம் மேலும் கவனம் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

 குஷி படம் சாதாரண காதல் கதைதான் என்றாலும் அதில் எஸ்.ஜே.சூர்யா செய்திருந்தது மேஜிக்கின் உச்சம். குறிப்பாக படத்தின் டைட்டில் கார்டிலேயே கதையை சொல்லி கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ரசிகர்களை தனது திரைக்கதை மூலமும், மேக்கிங் மூலமும் நகரவிடாமல் வைத்திருந்ததை வைத்து புரிந்துகொள்ளலாம் எஸ்.ஜே.சூர்யா எவ்வளவு பெரிய இயக்குநர் என்று. 2000ஆம் ஆண்டு வெளியான அந்தப் படமும் மெகா ஹிட்டானது.

குஷி படத்தில் என்ன இருந்தது அதில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டீர்கள் என இயக்குநர் விக்ரமனே விஜய்யிடம் கேட்டிருக்கிறார். இருப்பினும் எஸ்.ஜே.சூர்யா எனும் ஒற்றை ஆளை நம்பி படத்தில் நடித்தார் விஜய். அவரது கரியர் பெஸ்ட் படங்களில் குஷியும் ஒன்று. ஒவ்வொரு ஃப்ரேமிலும் விஜய்யின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். விஜய் எந்த அளவு நடித்தாரோ அதே அளவு ஜோதிகாவும் பின்னி பெடலெடுத்திருப்பார்.

காதலர்களுக்குள் நடக்கும் ஈகோவை வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்ததால் ஒவ்வொரு காட்சியிலும் ஈகோவை கொப்பளிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதை கனகச்சிதமாக செய்திருந்தார் ஜோதிகா. விஜய்யுடன் சண்டை போடுவது, மும்தாஜுடன் விஜய் நெருக்கம் காட்டும்போது உள்ளுக்குள் பொறுமுவது என தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்துக்கு சென்றார் அவர். அதேசமயம் குஷி படத்தில் ஜோதிகா கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

 இந்நிலையில் குஷி படத்தில் நடித்தது குறித்து ஜோதிகா பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், "படத்தின் கதை பற்றி இயக்குநர் சொல்லும்போது பழைய காலத்து ஹீரோக்கள் போல கொஞ்சம் அதிகமாகவே நடிக்க வேண்டும் என்றார். ஈகோ கொண்ட அனைவருமே கோபமாக மற்றவர்களை பார்த்து லுக் விடுவார்கள். ஆனால் குஷியில் வேண்டுமென்றே அது கொஞ்சம் ஓவராக இருக்க வேண்டும் என நினைத்து செய்தேன்.என்றார்.


Advertisement

Advertisement